தமிழ்நாட்டைப் பின்பற்றி கேரளாவிலும் ஆளுநரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Viduthalai
0 Min Read

திருவனந்தபுரம், நவ.3 மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர்மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு  அரசு சார்பில் சமீபத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டை தொடர்ந்து கேரள அரசும், அம்மாநில ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட் டுள்ளது. மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 3 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக ஆளுநர்மீது கேரள அரசு புகார் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *