பெங்களூரு, ஆக. 24- அகிய இந்திய காங்கிரஸ், கட்சி மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்ட உத்தரகாண்ட் மாநில கூட்டத்தில் பேசிய பின்னர் கலைந்து சென்ற இடத்தினை சுத்தம் செய்து விட்டு, கங்கையில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து, அந்த இடத்தில் தெளித்து தீமூட்டி யாகம் வளர்த்துள்ளனர்.
இதனை மதவாத அமைப்பான சிறீராமசேனா செய்துள்ளனர். இது பெரும் குற்றச் செயலாகும்.
இந்தியா சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் கடந்த பின்பும். தீண்டாமை எனும் கொடும் குற்றத்தினை, இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா இயக்கத்தின் துணை அமைப்பு மேற்கண்ட கொடுமையை மூத்த தேசிய தலைவருக்கு செய்துள்ள கொடும் செயலை வன்மையாக கண்டிக்கத் தக்கசெயலாகும். குற்றச் செயலில் ஈடுபட்ட அமைப்பினர் மீது தக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற கொடும் செயல்கள் நடக்காத வண்ணம் மாநில அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென ‘கருநாடக மாநிலம் திராவிடர் கழகம்’ தெரிவித்துக் கொள்கிறது.
சாம்ராஜ் நகரில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம்
பெங்களூரு, ஆக. 24- கருநாடக மாநிலம் சாம்ராஜ் நகர் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, வனத்துறையினரால் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். அதனை கடுமையான கண்டனத்தினை கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் செபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூவரும் கால்நடைகள் மேய்க்கச் சென்ற மூன்று தமிழர்களையும், எந்தவித எச்சரிக்கையும் இல்லாமல் சுட்டு கொன்றுள்ளனர். அவர்களை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சுட்டுக்கொள்வது எந்த வகையான நியாயமாகும் ? இது மனித இனத்திற்கு முற்றிலும் கொடுமைமிகு கடும் செயலாகும். இதனை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் இழப்பீடும், துறை ரீதியான சட்ட பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம் என கருநாடக மாநில திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.

