சென்னை, மார்ச் 8- மக்கள் மருந்தக தினம் -2023அய் முன்னிட்டு நேற்று (7.3.2023) சென்னை, எழும்பூர் அரசு குடும்ப நல பயிற்சி மய்யத்தில் நடைபெற்ற விழா வில் பங்கேற்று தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப் பாக மக்கள் மருந்தக சேவை புரிந்தவர் களுக்கு கேடயங்களை வழங்கினார். பின்னர் அவர் உரையில் குறிப்பிட்ட தாவது,
மலிவு விலையில் தரமான ஜெனரிக் மருந்துகள் கிடைக்கும் மக்கள் மருந் தகங்கள் திட்டம் குறித்த விழிப்பு ணர்வை அதிகரிக்கவும் ஜெனரிக் அல்லோபதி மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கா கவும் “மக்கள் மருந்தக தினம்” ஒவ்வொரு வருடமும் மார்ச் திங்கள் 7ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 5ஆவது மக்கள் மருந்தக தினத்தின் கருப்பொருள் “மலிவானது, தரமானது” என்பதாகும். மார்ச் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை இந்த மக்கள் மருந்தக தினம் கொண்டாடப்படுகிறது.
2015ஆம் ஆண்டு மக்கள் மருந்தகம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழு வதும் மொத்தம் 620 மக்கள் மருந்த கங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 72 மக்கள் மருந்தகங்களும் பிற மாவட் டங்களில் 548 மக்கள் மருந்தகம் செயல் படுகிறது.
நாள்பட்ட நோய்களான நீரிழிவு நோய், இதய-இரத்தநாள நோய்கள், புற்றுநோய்க்கான மருந்துகள், நுண் ணுயிர்க்கொல்லிகள், ஒவ்வாமைக்கான மருந்துகள், வயிறு-குடல் தொடர்பு டைய மருந்துகள், போஷாக்கு பொருட்கள் போன்றவை மக்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன.
மருத்துவர்கள் மருந்துகளின் பெயர் களை பரிந்துரைச்சீட்டில் அவற்றின் ஜெனரிக் பெயர்களில் எழுதுவதன் மூலம், அவற்றை மக்கள் மருந்தகங்களில் ஜெனரிக் பெயர்களிலேயே வாங்கிக் கொள்ள முடியும். மருத்துவரின் பரிந் துரை இல்லாமல் தானாக மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதால் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படும். எனவே பொது மக்கள் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். விலை யுயர்ந்த அடையாளப்படுத்தப்பட்ட (தீக்ஷீணீஸீபீமீபீ) மருந்துகளுடன் ஒப்பிட்டால் ஜெனரிக் மருந்துகள் 50% முதல் 90% வரை விலை குறைவாகவும் இணையான தரத்துடனும் கிடைக்கின்றன.
1759 மருந்துகளும், 280 அறுவை சிகிச்சை சாதனங்களும், தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் (ணிலிவி) உள்ள உயிர்காக்கும் மருந்துகள் உட்பட அனைத்து மருந்துகளும் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன் மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில் குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் லால்வீனா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் மரு.தி.சி.செல்வவிநாயகம், மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் மரு.விஜய லட்சுமி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.