டெக்கான் கிரானிக்கல், சென்னை :
* கருநாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்; சிபிஅய் விசாரணை நடத்த அனைத்து கட்சிகள் கோரிக்கை: சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் காரசார விவாதம்.
* எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாதீர்கள், கருநாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆத்திரம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* உச்சநீதிமன்றம், ஜந்தர் மந்தர் மாணவர் போராட்டத்தில் காவல்துறை நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. மாணவர்கள் மீதான வழக்குகள் குறித்து காவல் துறையின் நடவடிக்கைகளையும் இக்குழு ஆய்வு செய்யும்.
* ஆந்திரப் பிரதேச அமைச்சரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 34% இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 13 மாவட்ட பரிஷத்துகளை 28 ஆக மறுசீரமைக்கவும் அமைச்சரவை முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* முதன்மைத் தேர்வு நெருங்கும் நிலையில் யு.பி.எஸ்.சி-க்கு எதிராக மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) நோட்டீஸ்: யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வில் 8 கேள்விகளில் பிழைகள் உள்ளதாக 4 தேர்வர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்; இதனால் 16 மதிப்பெண்களுக்கு மேல் பாதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தி இந்து:
* பி.எம். கேர்ஸ் நிதி (PM CARES) நிதி ஏன் பெருமளவு பயன்படுத்தப்படாமல் உள்ளது? ரூ.8,452 கோடி நிதியில் 2024–2025ஆம் ஆண்டில் வெறும் 0.01% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆர்.டி.அய். செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
– குடந்தை கருணா
