ஏகாம்பரநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கைப் பணம் நீரில் நனைந்து நாசம்

1 Min Read

காஞ்சிபுரம், மார்ச் 10- பெரிய காஞ்சிபுரம் பகுதியில் கோயில் உள்ளது. இங்கு, உட்பிரகாரத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக தற்காலிக உண்டியல் இந்து சமய அற நிலையத்துறை மூலம் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் காணிக்கை 3 மாதத்திற்கு ஒருமுறை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி முன்னிலையில் திறந்து எண்ணப்படும். 

அந்தவகையில், 6.3.2023 அன்று இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பத்துக்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண் ணும் பணி தொடங்கியது. அப்போது, 3 உண்டியல்களில் உள்ள 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் நீரில் நனைந்து நாசமானது தெரியவந்தது. மழை சாரல்பட்டு பணம் நனைந்ததாக கூறப்படுகிறது.  தாங்கள் கடவுளுக்கென்று காணிக்கை செய்த பணம் நீரில் நனைந்து நாசமான நிகழ்வு பக்தர்களிடையே கடவுள் சக்திமீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *