மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக முதியவர் அடித்துக்கொலை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பாட்னா, மார்ச் 11 மாட்டு இறைச்சி வைத்திருந்ததாகக் கூறி முதியவர் மீது ஒரு கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியது. 

பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் ஹசன்புர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது முதியவர் நசீம் குரேஷி. இவர் கடந்த கடந்த 7.3.2023 அன்று தனது உறவுக்கார இளைஞர் பேரோஷ் குரேஷி என்ப வருடன் அருகில் உள்ள ஜோகியா கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, ஜோகியா கிராமத்தில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் அருகே நசீம், போரோஷ் ஆகி யோரை ஒரு கும்பல் இடைமறித்து, மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக சந்தேகமடைந்து இருவரிடமும் அந்தக் கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. வாக்கு வாதம் முற்றிய நிலையில் தாங்கள் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் அந்தக் கும்பல் நசீம், போரோஷ் மீது கடுமையாகத் தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த போரோஷ் அந்த கும்பலிடமிருந்து தப்பியோடினார். 

ஆனால், நசீமை சுற்றி வளைத்த அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கிய பின்னர் அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். படுகாயங்களுடன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நசீமை காவல்துறையினர்  மருத்துவமனையில் அனு மதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் நசீம் குரேஷி சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர்  மாட்டு இறைச்சி வைத் திருந்ததாக சந்தேகத்தில் முதியவரை அடித்துக் கொன்ற சுஹில் சிங், ரவி ஷா, உஜ்வால் சர்மா ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *