திராவிடர் கழகம் என்னும் பேரி யக்கத்தின் தலைவர் அன்னை மணியம்மையாரின் 104 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பெரியார் மாளிகை, மாவட்ட அலுவலகத்தில் அன்னையார் படத்திற்கு மலர் மாலையினை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஞா. ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), சா துரைசாமி (மாநகர தலைவர்), சி.கனகராஜ் (மாநகர அமைப்பாளர்), க.அம்பிகா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), சு. சாந்தி (மாவட்ட மகளிர் அணி செயலாளர்), சே.வசந்தி (மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர்), கு.அமுதா (மகளிர் அணி மாநகர அமைப்பாளர்), இரா. பேபி, பெரியார் மாளிகை திருநாவுக்கரசு, பெரியார் புத்தக நிலைய மேலாளர் மெர்லின், விமல், சாந்தகுமார், அர்ஜுன், அருண், சிரஞ்சீவி, பிஷப் ஹீபர், மனோஜ் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.