கன்னியாகுமரி, மார்ச் 13- திராவிடர்கழக தோவாளை ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் வெள்ளமடம் கிறிஸ்துநகரில் உள்ள மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் இல்லத்தில் மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் தாஸ் தொழிலாளரணி அமைப் பாளர் ச.ச. கருணாநிதி, திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.கோகுல், இரா.முகிலன் மற்றும் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். இயக்க வளர்ச்சிப் பணிகளை நடத்துவது விடுதலை நாளிதழுக்கு அதிக சந்தாக்கள் சேர்ப்பது என முடிவு செய்யப் பட்டது.