தமிழின் சிறப்பு ‘ழ’கரத்தின் வடிவம் ‘ஏணி’ சிந்துச் சமவெளி ஆய்வாளர் தகவல்

2 Min Read

திருச்சி, ஜூலை 20- தமிழின் சிறப்பு ழகரத்தின் வடிவம் சிந்துச் சமவெளியில் ஏழு படிகளைக் கொண்ட ஏணியாக பொறிக்கப் பட்டுள்ளதாக சிந்துச் சமவெளி ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் மலையாளத்தில் மட்டும் உள்ளது சிறப்பு ழகரம் (முகாரம்). நுனி நாக்கு உணர்ந்து அண்ணத்தை தடவ ரகர, ழகர ஆகிய இரண்டு எழுத்துகளும் பிறக்கும் என்கிறது தொல்காப்பியத்தின் எழுத்து அதிகாரம் நூற்பா. அச்சிறப்பு ழகரத்தின் வடிவம் சிந்துச் சமவெளியில் ஏழு படிகளைக் கொண்ட ஏணி வடிவில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஏணியின் வடிவம் ஒன்று சிந்துச் சமவெளி நாகரிக பகுதியைச் சேர்ந்த சுவத் பள்ளத் தாக்கிலும், ஹரப்பா பானை ஓடுகளிலும் மற்றும் தமிழ்நாட்டில் அழகன்குளம், கரூர், கீழடி, கொடுமணல், கொங்கல் நகரம், கொற்கை,மாங்குடி, நெடுங்கூர்.

பட்டரைப்பெரும்புதூர், திருநெல்வேலி, துலுக்கர்ப்பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளில் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ள பானை ஓடுகளிலும் கீறலாக இடம் பெற்றுள்ளன.

விழிப்பு, கனவு, துரியம், துரியாதீதம் ஆகிய குறியீடு களுடன் ஒரு ஏணியின் வடிவம், கேரள மாநிலம் எடக்கல்லில் பாறையில் பொறிக்கப்பட்ட கோட்டு உருவமாக உள்ளது. இத்தொல்லியல் சான்றுகள் வாயிலாக, இமயம் முதல் குமரி வரை வாழ்ந்த பெருங்குடி மக்கள் சிறப்பு ழகரத்தின் வடிவத்தை கல்வியல் ரீதியில் நன்கு அறிந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

இதன் மூலம் மெய்யியல் ரீதியில் துரியநிலையை அடைவதற்கு, கல்வியல் ரீதியில் ஏழு படிகளைக் கொண்ட ஏணியின் வடிவமே செந்தமிழ் மொழியின் சிறப்பு ழகரம் என்பதும், இமயம் முதல் குமரி வரை வாழ்ந்த பெருங்குடி மக்கள் யோகநெறியை கடைபிடித்து வாழ்ந்த தமிழர்கள் என்பதும் தெரிகிறது.

துரிய நிலையை அடைந்ததொரு யோகி என்பதை உணர்த்தும் வகையில், தற்போதைய காலக் கட்டத்தில் கூட இறந்த ஒருவர் உடலை, ஏழு குறுக்கு குச்சிகளை கொண்ட மூங்கில் மர ஏணியில் கிடத்தி, நான்கு பேர் சுமந்து சென்று இடு காட்டில் புதைப்பது பழந்தமிழர் மரபாக தொடர்கிறது. ஏணியின் வடிவிலான சிறப்பு ழகரத்தை ஆங்கில மொழியில் ‘zh’ என முறைப்படி உச்சரிப்பதும், எழுதுவதும் மிகச் சிறந்த செயலாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *