தமிழ்நாடு காவல்துறையில் 57 பெண் உதவி ஆய்வாளர்கள் ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு!

1 Min Read

டி.ஜி.பி. உத்தரவு!

சென்னை, ஜூலை 14– தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிரிவுகளில் உதவி ஆய்வாளர்களாக (SI) பணியாற்றி வந்த 57 பெண் அதிகாரிகளுக்கு, காவல் ஆய்வாளர்களாக (Inspector) பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் வழங்கி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முக்கியப் பிரிவுகளில் பணி நியமனம்

பதவி உயர்வு பெற்றுள்ள 57 பெண் ஆய்வாளர்களும், அவர்கள் இதுவரை வகித்து வந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய பணியிடங்களில் உடனடியாக பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் மாநிலத்தின் பல்வேறு முக்கியப் பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:

சைபர் க்ரைம் குற்றப்பிரிவு சிபிசிஅய்டி நுண்ணறிவு பிரிவு மாநில குற்ற ஆவணக் காப்பகம் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவல்துறைகள் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்கள் ரயில்வே காவல்துறை தமிழ்நாடு காவல்துறைப் பிரிவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், சட்டம் ஒழுங்கைத் திறம்படப் பேணவும் இந்தப் பதவி உயர்வுகள் மற்றும் புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *