சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்திட முடிவு

1 Min Read

சோழிங்கநல்லூர், ஜூலை 14- 12.7.2026 அன்று காலை 10 மணிக்கு சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட இளைஞரணித் தலைவர் நித்தியானந்தம் தலைமையில், மாவட்ட கழகப் புரவலர், தமிழ்நாடு மூதறிஞர் குழு தலைவர் டாக்டர் சுவாமிநாதன் தேவதாஸ் முன்னிலையில் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு கடவுள் மறுப்பு மற்றும் நோக்க உரையை வழங்கினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளர் தமிழினியன் உள்ளிட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட  அனைவரும் நமது கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

முடிவாக   கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

19/07/2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய “ஆர் எஸ்.எஸ். என்னும் டிரோஜன்  குதிரை” நூல் அறிமுக விழா அரங்கக் கூட்டமாக மாவட்டத் பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் த.ஆனந்தன் கூட்ட அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

நமது கழகத்தின் மீதும் தந்தை பெரியார், ஆசிரியர்  அவர்கள் மீதும் பற்று கொண்டவர்களை நமது கழகத்தில் உறுப்பினர்களாக சேர்க்க பல வழிகளில் முயற்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

நமது மாவட்ட கழகத்தின் சார்பில் ஆசிரியர் அவர்களின் தேதி வாங்கி பெரியாரியல் பயிற்சிப் பட்டறை  நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் டாக்டர் சுவாமிநாதன் தேவதாஸ், புலவர் சங்கரலிங்கம், வி.கே.ஆர்.பெர்னார்ட், நிவேதன், ஆர்கலைச்செல்வன், பி.சி.ஜெயராமன், மணிகண்டன், பி.குமார், நித்தியானந்தம், தமிழினியன் மற்றும் வேலூர் பாண்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *