அன்னை மணியம்மையார் அரங்கில் 11.7.2026 அன்று பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் மருத்துவர் அணி இணைந்து நடத்திய நோய் நாடி நோய் முதல் நாடி என்ற தலைப்பில் மருத்துவ விழிப்புணர்வுக் கூட்டம் வி.கே.ஆர். பெரியார் செல்வியின் இணைப்புரையுடன் நடைபெற்றது. ஆர்.சண்முகநாதன் (தலைவர், வடசென்னை மாவட்ட ப.க.) வரவேற்புரையாற்றினார். துவக்கவுரையை மருத்துவர் மீனாம்பாள் சந்திரகுமார், இதற்கு முன் நடந்த மருத்துவ முகாமில் நடந்த பணியை விளக்கி, அதனால் பயனடைந்தவர்களைப் பற்றி விரிவாக விளக்கினார். தலைமையுரை ஆற்றிய இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், ப.க.) இந்த கூட்டத்தின் அவசியத்தை பற்றி பேசினார். சிறப்புரையை இதய அறுவை சிகிச்சை வல்லுநர் மருத்துவர் நெ.பரத்குரு சிறப்பான வகையில் பட விளக்கங்களுடன் எப்படி இருந்தால் நலமாக இருக்கலாம் என்று விளக்கினார். கு.ஆசைத்தம்பி (மாவட்ட தலைவர்) நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. பார்வையாளர்கள் பல கேள்விகளைக் கேட்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
