பெண்ணியம்: சில புதிய போக்குகள்

2 Min Read

மகளிர் அரங்கம்

தீவிரப் பெண்ணியம்

தீவிரப் பெண்ணியம் என்பது பெண்ணியத்தின் ஒரு முக்கியமான பிரிவாகும். பெண்களின் ஒடுக்குமுறை சமூகத்தின் மேலோட்டமான சட்டம், கல்வி மற்றும் பொருளாதார அமைப்புகளில் மட்டுமல்ல, அதற்கு அடிப்படையாக உள்ள ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்பிலேயே வேரூன்றி உள்ளது எனக் கருதும் பெண்ணியக் கோட்பாடாகும்.

பெண்களின் உடல், இனப்பெருக்கம், பாலியல், பொருளாதாரம் போன்ற நிலை களில் ஆணாதிக்கம் எவ்வாறு அதிகாரம் செலுத்துகிறது என்பது தீவிரப் பெண்ணியத்தை மய்யமாகக் கொண்டு ஆராயப்படுகிறது. இதன் கொள்கைகளாக ஆணாதிக்க நிறுவனங்கள், பெண்களின் உடல் மீதான கட்டுப்பாடு, பெண்கள் போகப் பொருளாக்கப்படுதல், பெண்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த நிலையில் தீவிரப் பெண்ணியம் ஆராயப்படுகின்றது.

1960-களில் தொடங்கிப் பெண்ணியத்திற்கும் அதன் அமைப்பிற்கும் புது விளக்கங்களை அளித்தது. தீவிரப் பெண்ணியக் கோட்பாட்டில் அணுகும்போது அதன் வேராக இருப்பது பெண்கள் ’ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினர்’ என்பதாகும். இதன்படி பாலினப் பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்த ஒடுக்குதல் பொருளாதார அடிப்படையிலமைந்த ஒடுக்குதலை விடச் சமூகத்தின் தன்மைகளை அதிக அளவில் பாதிக்கின்றது என்பதாகும். தமிழ்ச் சூழலில் தீவிரப் பெண்ணி யத்தின் முன்னோடியாகப் பெரியாரைக் கருதலாம். மேலை நாடுகளில் தீவிரப் பெண்ணியம் (Radical feminism) உருவாவதற்கு முன்பே அவர் ஆணாதிக்கத்தின் வேர்களாகக் கருதிய திருமணம், கருத்தரிப்பு, கற்பு சார்ந்த சிலவற்றைக் கடுமையாக எடுத்துக் கூறினார்.

சூழலியப் பெண்ணியம்

இலக்கியத்திற்கும் இயற்கைக்குமான உறவுகள் குறித்த உரை யாடல்கள் நீண்டகாலமாக இருந்து வந்தாலும், இயற்கை – இலக்கியம் – பெண் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பு குறித்த சொல்லாடல்கள் இரண்டா யிரத்துக்குப் பிறகு தீவிரமடைந்தன.

இயற்கையை மனிதர்கள் தன் வயப் படுத்தியதால் சூழலியல்(Ecology) என்ற பார்வை தோன்றியது. மனிதர் களின் அகம், புறம் சார்ந்து இருக்கக் கூடிய செய்திகளை இயற்கையோடு பொருத்திப் பார்த்து அதனை விமர்சிப் பதனால் சூழலியத் திறனாய்வு (Eco-Criticism) நடைமுறையில் வந்தது. பெண்களும் இயற்கையும் ஒரே மாதிரியான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பெண்களின் விடுதலையும் இயற்கையின் பாதுகாப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பதால் குழலியப் பெண்ணியம்(Eco Feminism) என்ற சொல் தோன்றி, பிறகு கோட்பாடாக வலுப்பெற்றது.  இச்சொல் தி போனே(D eaubonne) என்பவரால் 1974-இல் அறிமுகம் செய்து வைத்ததைத் தொடர்ந்து, இந்தச் சொற்றொடர் மே ஃபிரான் சாய்ஸ் டி பார்னால்(Fran Chais de Parnaul) என்பவரால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு 1980-களில் வளரத் தொடங்கியது.

‘தமிழ் இலக்கியத்தில் சூழலியப் பெண்ணியம்’(Eco feminism Discourse in Tamil) குறித்து ஆய்ந்தவர் பேராசிரியர் வனத்து அந்தோணி ஆவார். இந்நூலில் இயற்கை மற்றும் பெண்ணியத்தை இணைத்துத் தமிழ் இலக்கியங்களில் நிலவும் சூழலியல் பார்வையைப் பகுப் பாய்வு செய்துள்ளார். சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியங்கள் வரை சூழலியப் பெண்ணியத்தின் தாக்கம் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

– வெ.ரேவதி, முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னை.

– முனைவர் து.மேஷாக் தமிழ்த் துறைத் தலைவர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி, சென்னை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *