புரட்சித்தாய் நீயே ஆனாய் !

Viduthalai
1 Min Read

அன்னை மணி அம்மா நின்போல்

இன்னொருவர் பிறப்ப தில்லை

எண்ணஞ்சொல் செயலு மான

நின்னை என்றும் மறப்ப தில்லை

எளிமைக்கோர் இலக்கண மானாய்

உரிமைப்போர் முழக்கமே ஆனாய்

வலிமைக்கோர் இருப்பே ஆனாய்

வாய்மைப்போர்க் களமாய் ஆனாய்

அன்புக்கோர் எல்லை ஆனாய்

அரவணைப்பில் சிகரம் ஆனாய்

பண்பிலுயர் இமய மானாய்

பாசநிறை கடலு மானாய்

தந்தைபெரி யாரைக் காத்த

தாயாகித் தாதியு மானாய்

இந்தப்பே ருலகம் காணா

இயக்கத்தின் காவலர் ஆனாய்

நாத்திகத்தின் தலைவ ரானாய்

சாத்திரத்தின் வைரி யானாய்

போர்க்குணத்தில் பெரியா ரானாய்

புரட்சித்தாய் நீயே ஆனாய்!

இராவணரைச் சிறக்க வைத்தாய்

இராமனுக்கே நெருப்பு வைத்தாய்

திராவிடத்தின் தனித்துவத் தாய்

தென்றிசையை நோக்க வைத்தாய்

ஆரியத்தை அலுங்க வைத்தாய்

அடிவயிற்றைக் கலங்க வைத்தாய்

வீரியத்தை விளங்க வைத்தாய்

வேதியத்தை மழுங்க வைத்தாய்

துன்பம் துயர் தாங்கி நின்றாய்

துரோகங்கள் எதிர்த்து வென்றாய்

மன்பதைக்கே எடுத்துக் காட்டாய்

மாண்பனைத்தும் பெற்ற நற்றாய். 

வீரமணி துலங்க வைத்தாய்

வெற்றிமணி ஒலிக்க வைத்தாய்

பாரெங்கும் முழங்க வைத்தாய்

பெரியாரைப் புழங்க வைத்தாய்

– கவிஞர் பெரு. இளங்கோ

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *