சென்னை எழும்பூர் – திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

1 Min Read

சென்னை, ஜுலை8- திருச்சி கோட்டத்தில் பரா மரிப்புப் பணிகள் நடை பெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரி யில் இருந்து வருகிற 12ஆம் தேதி மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-16861) பகுதிநேரமாக புதுச்சேரி-கடலூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் புதுச்சேரிக்கு பதிலாக கடலூர் போர்டில் இருந்து மதியம் 2.54 மணிக்கு புறப்படும்.

சோழன் எக்ஸ்பிரஸ்

அதே போல, திருச்சி யில் இருந்து வருகிற 12, 13, 14 ஆகிய தேதிகளில் மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் (22676) 30 நிமிடம் தாமதமாக திருச்சியில் இருந்து புறப்படும். அதே போல, எழும்பூரில் இருந்து வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு திருச்சிக்கு செல்லும் சோழன் எக்ஸ் பிரஸ் ரயில் (22675) 40 நிமிடம் தாமதமாக எழும் பூரில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *