பகுத்தறிவுப் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசனுக்கு நமது வீர வணக்கம்!

3 Min Read

அரசியல், இரங்கல் அறிக்கை

அந்தோ, நமது வரலாற்றுப் பேராசிரியரும், நம் பெரியார் திடலை தனது முக்கிய இருப்பிடமாகவும் (இல்லத்திற்கு அடுத்தபடி) கொண்ட நமது உற்ற தோழர் மானமிகு  முனைவர் ந.க.மங்களமுருகேசன்  (வயது 79) அவர்கள் நேற்று (17.3.2023) இரவு 7 மணியளவில் திடீரென்று மாரடைப்பால் இயற்கையெய்தினார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு, சொல்லொணாத சோகத்தையும், துயரத்தையும் பெற்றோம்! 

கடந்த சில நாள்களுக்கு முன்புகூட அவர் பற்றிய உரையாடலில் திளைத்தவன் நான்.அவர் பதவியில் இருந்தபோதும், அதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் நம்மிடமும், இயக்கத்திடமும் அவர் பூண்டிருந்த நட்புறவும், இயக்கத்தின் ஏடுகளுக்கு அவர் செய்த எழுத்துத் தொண்டும் எப்போதும் நினைவைவிட்டு நீங்காதவை ஆகும்!

பெரியார் திடலில் பேராசிரியர் புலவர் ஏறு ந.இராமநாதன், பெரியார் பேருரையாளர் அ.இறையனார் – திருமகள், பேராசிரியர் கு.வெ.கி. ஆசான், ஆசிரியர் மு.நீ. சிவராசன் போன்ற அரசு ஓய்வு பெற்ற எழுத்தாளர் –  கருத்தாளர் சிந்தனை விவாதக் குழுவில் நேற்றுவரை நம்முடன் இணைந்து தொண்டாற்றியப் பெருமகன்!

உரிமை எடுத்துக் கொண்டு அவரிடம் பேசுவேன். எனது வாழ்விணையரும், அவரிடத்தில் அன்புடன் உரையாடுவார்.

மறைந்த அவர் வாழ்விணையர், குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் அன்புடன் பழகுபவராவர்.

திராவிட இயக்க  உணர்வாளர்களாகப் பேராசிரியர்  தம் பட்டிலியல் தனி இடம் பெற்றவர். அவரது மறைவு அவரது குருதிக் குடும்பத்திற்கு ஏற்படுத்திட்ட நட்டத்தைவிட, இயக்கத்திற்கு ஏற்படுத்திய நட்டமும், துயரமும்  மிக அதிகம். மறைந்த பிறகு தனது உடலை மருத்துவமனைக்குக் கொடையளிக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேற்றப்படுவது அவருக்குச் செய்யப்படும் சுயமரியாதை வீர வணக்கமாகும்!

மறைவுற்ற ந.க. மங்கள முருகேசனாரின் மகன், மகள் மற்றும் குடும்பத்தினருக்கு நமது ஆறுதலும்,  ஆழ்ந்த இரங்கலும் உரித்தாகுக! 

அவருக்கு நமது வீர வணக்கம்!!

                                                                                                                                      கி.வீரமணி

சென்னை                                                                                                                தலைவர், 

18.3.2023                                                                                                       திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *