அதானியை கைது செய்க!

1 Min Read

ஒன்றிய நிதி அமைச்சர் அலுவலகம் சென்று மம்தா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

  புதுடில்லி, மார்ச் 24 மம்தா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய நிதி அமைச்சர் அலுவலகத்துக்கு சென்று அதானியை கைது செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். பிரபல தொழி லதிபர் கவுதம் அதானியின் நிறுவ னங்கள், பங்குச்சந்தையில் மோசடி செய்ததாகவும், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ‘ஹிண்டன்பர்க்’ நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதன் அடிப்படையில், இதுதொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் வற் புறுத்தி வருகின்றன. 

மேற்கு வங்காள மாநில முதல்- அமைச்சர் மம்தா  தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதானியை கைது செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறது. பாரத ஸ்டேட் வங்கி, எல்.யீய்.சி. ஆகியவற்றில் இருந்த மக்கள் பணம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடியை அதானி முறைகேடு செய்து விட்டதாக அக்கட்சி கூறுகிறது. இந்தநிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் பிரதிமா மண்டல், அபு தாஹர் கான், கலிலுர் ரகுமான், சுனில் மண்டல், மாநிலங் களவை உறுப்பினர்கள் சாந்தனு சென், அபிர் பிஸ்வாஸ், மவுசம் நூர், சுஷ்மிதா தேவ் ஆகியோர் நேற்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்துக்கு சென்றனர். மக்கள் பணத்தை முறைகேடு செய்ததற்காக அதானியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பிரதமர் மோடி, அதானி உருவம் பொறித்த 2 தொப்பிகளை தங்கள் எதிர்ப்பை தெரி விக்கும்வகையில் அங்கேயே விட்டுச் சென்றனர். 

இதுபோல், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கள் அடங்கிய மற்றொரு குழு, இதே கோரிக்கையை வலியுறுத்துவதற்காக, அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றது.

 ”ஊழலுக்கு அடிபணிய மாட்டோம். எங்கள் போராட்டத்தில் உறுதியாக இருப்போம்” என்று அக்கட்சி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *