ராகுல் காந்தி மீதான நடவடிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Viduthalai
3 Min Read

இந்தியா, தமிழ்நாடு

சென்னை, மார்ச் 25- ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலை வரும்  தமிழ்நாடு முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின் கண் டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு: இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத் தைத் தெரிவித்துக் கொள்கி றேன். அகில இந்திய அரசியல் கட்சியின் பெருந்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினருக் குக் கூட கருத்துச் சொல்லும் ஜனநாயக உரிமை என்பது கிடையாது என்று மிரட்டும் தொனியில் இருக்கிறது இந்த நடவடிக்கை.  ராகுல் காந்தி அவர்கள் பேசிய கருத்து அவதூறானது என்ற அடிப் படையில் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக் கில் அவருக்கு இரண்டு ஆண் டுகள் தண்டனை தரப்பட்டுள் ளது. இந்தத் தண்டனையை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மா அவர்கள், இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காகக் கால அவகாசத்தை ராகுல் காந்தி அவர்களுக்கு வழங்கி இருக் கிறார். ‘வழக்கை மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தீர்ப்பை அமல்படுத்துவதற்கு 30 நாட் கள் தடை விதிக்கிறேன்’ என் றும் சொல்லி இருக்கிறார்

 மேல்முறையீடு செய்வது என்பது தண்டனை பெற்ற எவருக்கும் உள்ள அடிப்படை உரிமை ஆகும். அதனைத் தனது தீர்ப்பிலேயே நீதிபதி சுட்டிக்காட்டி 30 நாட்கள் வழங்கி இருக்கிறார். அதற்குள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது ஆகும். 2 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திவிடவில்லை. மாவட்ட நீதிமன் றம்தான் தீர்ப்பு தந்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் மேல்முறை யீடு இருக்கிறது. இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டியது உச்சநீதிமன்றம் ஆகும். இதற் காகவே காத்திருந்ததைப் போல 23-ஆம் தேதி தீர்ப்பு, 24-ஆம் தேதி பதவிப் பறிப்பு என்று நடவடிக்கை எடுத்துள் ளது பா.ஜ.க. அரசு.

  ராகுல் காந்தி அவர்களைப் பார்த்து எந்தளவுக்கு பா.ஜ.க. தலைமை பயந்து இருக்கிறது என்பது இதன்மூலம் தெரிகி றது. அவரது இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் இதற்குக் காரணம் ஆகும். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அவர்கள் வைத்த குற்றச் சாட்டுகளுக்குச் சரியான பதிலை ஒன்றிய அரசில் இது வரை யாரும் சொல்லவில்லை. மீண்டும் அவரை நாடாளு மன்றத்துக்குள் அனுமதித்தால், தங்களது அரசியலுக்கு நெருக் கடி ஏற்படும் என அஞ்சியே ராகுல் காந்தி அவர்களைத் தகுதிநீக்கம் செய்துள்ளார்கள். இந்தத் தகுதிநீக்க நடவடிக்கை களின் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பா.ஜ.க. இழந்துவிட் டது. நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்கப்படும் குற்றச் சாட்டுகளுக்குப் பதில் சொல் லாமல், கேள்வி கேட்டவரை அங்கிருந்து அப்புறப்படுத்து வது ஒன்றிய அரசுக்கு அழ கல்ல. இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  ராகுல் காந்தி அவர்கள் மீதான நடவடிக்கை என்பது முற் போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என்பதை உணர்ந்து இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும். இவ்வாறு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *