தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களிடம் கடலூர் கழக நிகழ்வின் அழைப்பிதழை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தோழர்களுடன் சென்று நேரில் சந்தித்து வழங்கி, நிகழ்வில் அவசியம் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டார். அவரும் அவசியம் நிகழ்வில் பங்கேற்கிறேன். ஆசிரியரை நலம் நாடியதாக கூறுங்கள். இந்த வயதிலும் இவரைப் போல் கடுமையாக உழைக்கிற தலைவரை பார்க்க முடியாது என்று பாராட்டினார். கழகப் பொதுச் செயலாளர் உடன் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் நெடுமாறன், நெய்வேலி பாவேந்தர் விரும்பி, வீரசுந்தரம் ஆகியோர் சென்றிருந்தனர். (கீரப்பாளையம், 27.3.2023).