இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 27-  இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்கு கிறது. 

இந்தியா-இலங்கை இடையில் பயணிகள் கப்பல் இயக்கம் குறித்து நீண்டகாலமாக கூறப் பட்டு வந்த நிலையில் இதுதொடர்பான புதிய அறிவிப்பை இலங்கை விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா நேற்று (26.3.2023) வெளியிட் டார். அதாவது, ‘வருகிற ஏப்ரல் 29-ஆம் தேதி முதல், இந்தியாவின் காரைக்கால்-இலங்கை யாழ்ப்பாண மாவட்டத் தில் உள்ள காங்கேசன் துறை இடையே பயணி கள் கப்பல் போக்குவரத்து தொடங்கும். 

இந்த கப்பலில் செல் லும் ஒவ்வொரு பயணி யும், சலுகைக் கட்டணத் தில் தலா 100 கிலோ பொருட்கள் வரை கொண்டுசெல்ல அனும திக்கப்படுவார்கள். இரு நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு பயணிகள் கப்பல் நிறுவனமும் இந்த சேவையை இயக்க முன் வரலாம்’ என்று கூறி னார். இந்த போக்குவரத் துக்கு வசதியாக, காங் கேசன்துறையில் ஒரு பய ணிகள் கப்பல் தளத்தை இலங்கை கடற்படை கட்டி வருகிறது. இந்தியா-இலங்கை இடையிலான கப்பல் பயணம், 4 மணி நேரம் கொண்டதாக இருக்கும் என இலங்கை போக்குவரத்து அமைச் சகம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *