திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் பெற்றோர் உரிமையை அங்கீகரிக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கேரளம் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஹரி தேவகீத் என்ற 30 வயது திருநம்பி, எதிர்காலத்தில் குடும்பம் தொடங்குவதற்காக தனது கரு முட்டைகளை சேமிக்க அனுமதிகோரி நீதிமன்றத்தை நாடினார். அவருக்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளி மற்றும் மாற்றுப்பாலினத்தவர் என்ற பாகுபாடின்றி, அனைவரும் பெற்றோராகும் உரிமையை உறுதி செய்கிறது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
