அந்துமணியல்ல – சிண்டு மணி!

1 Min Read

அரசியல்

கேள்வி: பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்த ஈ.வெ.ரா.வின் பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராகுகாலம் முடிந்த பிறகுதானே பதவி ஏற்றுள்ளார்?

பதில்: தன் தாத்தாவின் கடவுள் எதிர்ப்பைப் புரிந்துகொண்டார் போலும்! அதனால் இவ்வாறு நடந்து கொள்கிறார். இதேபோல் தானே ஹிந்து கோவில் களாக சென்று வழிபடுகிறார் ஸ்டாலினின் மனைவி துர்கா.

– ‘தினமலர்’ வார மலர், 

‘அந்துமணி பதில்’, 26.3.2023, பக்கம் 10

பதவி ஏற்பு நாளையும், நேரத்தையும் முடிவு செய்வது சபாநாயகர் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் எழுதும் ‘தினமலரின்’ ‘புத்தி தீட்சன்யம்’ இதுதானோ!

ஸ்டாலின் மனைவி கோவிலுக்குச் செல்லுவதை வலுக்கட்டாயமாகத் தடுப்பது பகுத்தறிவு ஆகாது – பகுத்தறிவு இருந்தால் ‘தினமலர்’ இப்படி எழுதாது.

ஆமாம்… ஹிந்துத்துவாவை அறிமுகப்படுத்திய சாவர்க்கார் கடவுள் நம்பிக்கையற்றவர்தானே! அவரைப் பின்பற்றுமா ‘தினமலர்க்’ கும்பல்?

‘நானேதான் கடவுள்’ (அகம்பிரமாஸ்மி) என்று சொல்லும் சங்கராச்சாரியார் கோவில் கோவிலாகச் சென்று கும்பிடுத்தண்டம் போடுவானேன்?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *