வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஈரோட்டில் இருந்து காங்கிரசார் வாகனப் பேரணி

1 Min Read

அரசியல்

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்

ஈரோடு,  மார்ச் 29- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி, ஈரோட்டில் இருந்து வாகனப் பேரணியை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமையை எதிர்த்து நடந்த போராட்டத்தின் நூற்றாண்டு விழா நினைவாக, ஈரோட்டுக்கும், தந்தை பெரியாரின் நினைவில்லத்துக்கும் வந்து தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தி விட்டு, வைக்கம் நிகழ்வுகளை நடத்துவது என கேரள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதையொட்டி, கேரள காங்கிரஸ் குழுவினர் நேற்று (28.3.2023) ஈரோடு வந்தனர்.

நாளை (மார்ச் 30) வைக்கத்தில் நடைபெறும் நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோட்டில் இருந்து வாகனப்பேரணி நேற்று புறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அமைச்சர் முத்துசாமி, காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மோகன்குமாரமங்கலம், கேரள மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், கவுன்சிலர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *