அய்யப்பன் கிருபையோ கிருபை!

1 Min Read

தரிசனம் முடிந்து திரும்பிய பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 64 பேர் காயம்

பத்தனம்திட்டா, மார்ச் 29- மயிலாடுதுறை மாவட் டத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஒரு பேருந்தில் சபரி மலைக்கு சென்றனர். 64 பெரியவர்கள்; 9 குழந்தைகள் பேருந்தில் இருந்தனர். அவர்கள் சபரிமலையில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பி கொண்டு இருந்தனர்.

நிலக்கல் அருகே இலவுங்கல் என்ற இடத்தில் இல வுங்கல்எருமேலி வரும் போது 3ஆவது வளைவில் பேருந்து எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் பேருந்து ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். விபத்து நடந்த பகுதிக்கு இருந்து ஆம்புலன்ஸ், தீயணைப்பு படையினர் மற்றும் காவலர்கள் விரைந்தனர். உடன டியாக மீட்கப்பட்டவர்கள் உள்ளூர் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பேருந்துக்குள் சிக்கி இருந்த 20 க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். நெட்வொர்க் இல்லாத சபரிமலை வனப்பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் 64 பேர் காயம் அடைந்து உள்ளனர் என கூறப்படுகிறது. ஓட்டுநர் படுகாயம் அடைந்து உள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *