பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைப்புப் பணிகள் அமைச்சர் இ.பெரியசாமி தகவல்

2 Min Read

அரசியல்

சென்னை,ஏப். 1- 149 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் 190 கோடி ரூபாயில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந் துள்ளன. மேலும், 88 பெரியார் நினைவு சமத்துவ புரங்களில் ரூ.67 கோடி ஒதுக்கீட்டில் சீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன என சட்டப் பேரவையில் அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ஆம் ஆண்டு ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்’ கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வை அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப் பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசிய தாவது:

ஊரக தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் ரூ.5,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.

100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கப் பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். நமக்கு நாமே திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டப் படும். தமிழ்நாட்டில் 2,500 ஊராட்சி களில் உள்ள பள்ளி சீரமைப்புகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவேற்றப்படும்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் 2 ஆண்டுகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2.16 லட்சம் வீடுகள் கட்டப் பட்டுள்ளது. 149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்துள்ளன.

கிராமப்புற ஏழைகளின் வாழ்வா தாரம் மேம்பட ரூ.1000 கோடியில் தனிநபர் சமுதாய சொத்துக்கள் உருவாக்கப்படும்.

விளிம்புநிலை மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.1.500 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.

ஊரக பகுதிகளில் பணிபுரியும் 66,130 தூய்மை காவலர்களின் மதிப் பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் 2,043 புதிய சத்துணவு கூடங்கள் ரூ.154 கோடியில் கட்டப்படும்.

10.50 லட்சம் மகளிர் குழுக்களுக்கு ரூ.134 கோடி மதிப்பில் முருங்கை மரக் கன்றுகள் வழங்கப்படும்

-இவ்வாறு அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *