டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் திருத்தம் காரணமாக 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; இதுவே அதிக சதவீதம் வாக்களிப்பு என கூறுவதற்கு காரணம் என்கிறார்கள் தேர்தல் ஆய்வாளர்கள்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தமிழ்நாட்டில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிகளில் ஆர்வத்துடன் குவிந்த மக்கள் தமிழ்நாட்டில் 85% வாக்குப்பதிவு: கரூர் மாவட்டத்தில் அதிக வாக்குகள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மணிப்பூரில் தொடரும் வன்முறை: போராட்டங்கள் தொடர்வதால் கல்வி நிறுவனங்கள் மூடல்; போக்கு வரத்து பாதிப்பு
தி இந்து:
*இஸ்ரேல்-காசா மோதல் குறித்து மோடியின் மவுனம் என காங்கிரஸ் கண்டனம். இஸ்ரேலில் உள்ள ஒரு “கொலையாளி ஆட்சிக்கு” (MURDEROUS REGIME) முந்தைய எந்த அரசும் இத்தகைய “ஒற்றுமையை” வெளிப்படுத்தியதில்லை என்றும் விமர்சனம்.
தி டெலிகிராப்:
* ஜே.என்.யு. பல்கலைக்கழக ஊழியர்களின் குழந்தைகளுக்கு 5% இடஒதுக்கீடு அளிப்பதற்கு ஜே.என்.யு. ஆசிரியர்கள் எதிர்ப்பு; இம்முடிவு பிற்போக்குத்தனமானது மற்றும் சமத்துவமற்றது என விமர்சனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மோடியின் உரை தூர்தர்ஷன் மற்றும் சன்சத் டிவி ஆகிய அலைவரிசைகள் ஒளிபரப்பியதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, காங்கிரஸ் நிர்வாகி டி.என். பிரதாபன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்
– குடந்தை கருணா

