ஜனநாயகக் கடமையாற்ற அழைப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்களிப்பு!

சென்னை, ஏப். 23- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (23.4.2026) தனது குடும்பத்தினருடன் சென்று சென்னை தேனாம் பேட்டையில் உள்ள எஸ்அய்இடி(SIET) கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவியும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வந்து வாக்களித்தனர்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தகுதியுள்ள அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்” என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியதுடன், பொதுமக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார். வாக்குச்சாவடி மய்யத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், முக்கியத் தலைவர்களின் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *