ஈரோடு, ஏப். 17- ஜன நாயகத்தை காக்க நாம் ஒன்று படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என கருநாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசினார்.
ஈரோடு சம்பத் நகரில் கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பனை ஆதரித்து, அவர் மேலும் பேசியதாவது:
ஜனநாயகத்தை காக்க நாம் ஒன்று படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
திமுக, காங்கிரஸ், இந்தியா கூட்டணி ஒன்றுபட்டால் தான் இந்தியாவில் நல்லாட்சியும் அமைதியும் நிலவும். பாஜக இந்தியாவில் வேற்று மையை உருவாக்க முயற் சிக்கிறது. இதற்கு நாம் வழிவகுக்கக் கூடாது.
இந்திய தேசத்தின் கட்டமைப்பில் தமிழ்நாடு மற்றும் கருநாடகா முக்கிய பங்காற்றுகின்றன. இதில், தமிழ்நாடு 2ஆவது முக்கியமாக பங்களிக்கிறது. கடந்த அய்ந்தாண்டுகளாக நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் திறம்பட செயல்படுத்தியுள்ளார்.
தற்போது தொடங்கப் பட்டுள்ள புதிய கட்சி கள் என்ன செய்ய போகி றார்கள், அவர்களின் கொள்கைகள் தெரியாது.
தற்போது உள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களுக்கான கூட்டணி. இளைஞர்கள், மகளிருக்கு உங்கள் தலைவர்களை திரையில் தேடாதீர்கள் என வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு பேசினார்.

