ராணிப்பேட்டைக்கு வருகிறது ரூ.1,000 கோடியில் காலணி தொழிற்சாலை

1 Min Read

அரசியல்

சென்னை, ஏப். 5- ராணிப்பேட் டையில் ரூ.1,000 கோடியில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில், காலணி தொழிற்சா லையை தைவான் நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்கான நில ஒதுக்கீட்டு ஆணை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் வழங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் நாட்டி லேயே முன்னணி மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முன்னெடுத்து செல் லும் தமிழ்நாடு முதலமைச்சரின் அயராத முயற்சியின் காரணமாக தமிழ்நாடு மேலும் மேன்மை பெறும் வகையில் பல்வேறு நடவ டிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

கடந்தாண்டு ஏப்.7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தைவானைச் சேர்ந்த ஹோங்ஃபூ தொழில் குழு மம், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் காலணி தொழிற் சாலை அமைப்பதற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்தது. இதை யடுத்து, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில், ஹோங்ஃபூ தொழில் குழுமத்தின் தலைவர் டி.ஒய்.சங்க்கிடம் கொள்கை அளவில் நிலம் ஒதுக் கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் நிலை-1இல் 125 ஏக்கர் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், 5 ஏக்கர் நிலம் உள்நாட்டு பயன்பாட்டுக்காகவும் வழங்கப்பட்டது. இத்தொழிற் சாலை அமைவதன் மூலம் 17,350 பேருக்கு நேரடியாகவும், 2,650 பேருக்கு மறைமுகமாகவும் என 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்நிறுவனம், அடுத்த 5 ஆண் டுகளில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது.

இந்நிகழ்ச்சியில், துறையின் செயலர் ச.கிருஷ்ணன், சிப்காட் மேலாண் இயக்குநர் எ.சுந்தர வல்லி, தமிழ்நாடு தொழில் வழி காட்டி நிறுவன மேலாண் இயக் குநர் விஷ்ணு, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆஷா அஜித், சிப்காட் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *