சேலம், ஏப். 9– சுயமரியாதை இயக்கத்தின் தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுகோட்டை அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சேலம் உடையாப்பட்டி சந்தை மைதானத்தில் 28-3- 2026 அன்று மாலை 6:30 மணி அளவில் நடைபெற்றது.
இக்கூட்டம் அயோத்தி யாபட்டணம் ஒன்றிய கழகச் செயலாளர் ஆ ராஜா வரவேற்புரை ஆற்ற, உடையாப்பட்டி கிளைக் கழகத் தலைவர் துரை.அஜித் குமார் தலைமை தாங்க, சேலம் மாவட்டச் செயலாளர் மூணங்கரடு பெ. சரவணன், சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் துரை. சக்திவேல் இரு வரும் கூட்ட நிகழ்வை ஒருங் கிணைத்தனர்.
சேலம் மாவட்ட துணைத் தலைவர் சு.இமயவரம்பன், மேட்டூர் மாவட்ட தலைவர் ப.க கோவி.அன்புமதி, ஆத்தூர் மாவட்ட கழக செயலாளர் நீ. சேகர், அயோத்தியாபட்டினம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் அ. விஜய குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ தொடக்க உரை நிகழ்த் தினார்.
ஆத்தூர் கழக மாவட்ட ப.க. தலைவர் வா .முரு கானந்தம் மேட்டூர் மாவட்ட தலைவர் கா.நா பாலு பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வா.தமிழ் பிரபாகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மாநில மகளிர் பாசறையின் துணைச் செயலாளர் சேலம் ப.காயத்ரி, மாநில பகுத் தறிவு கலைத்துறைச் செயலாளர் திரைப்பட இயக்குநர் மாரி. கருணாநிதி சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியாக உடையார்பட்டி கிளைக் கழக செயலாளர் ரா.வெற்றிவேல் நன்றியுரை கூறினார்.

