ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 6.4.2023  டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஒன்றிய அரசு வரலாற்றை உருவாக்கட்டும். ஆனால் கடந்த கால வரலாற்றை ஒப்புக் கொள்ளவும் வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மாநிலங்கள் சட்ட உதவிக்கான பட்ஜெட் ஒதுக் கீட்டை அதிகரித்தாலும், சட்ட உதவி கிளினிக்குகள் 2019 முதல் 2021 வரை 44 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய நீதி அறிக்கை (மியிஸி) 2022 தெரிவித்துள்ளது.

தி டெலிகிராப்:

* நரேந்திர மோடி அரசாங்கம் சிறு வணிகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஏகபோகங்களை உருவாக்கி, பொருட்களின் விலைகள் வழக்கத்திற்கு மாறாக உயர்ந்ததற்கு வழிவகுத்தது என்ற குற்றச்சாட்டு பேரில் நிரூபணமாகியுள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இத்தகைய சலுகைகளுக்கு ஈடாக, மோடிக்கும் பா.ஜ.க.வுக்கும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

மீடியா ஒன் மீதான தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது, அரசாங்க கொள்கை மீதான விமர்சனம் ஸ்தாபனத்திற்கு எதிரானது அல்ல என்றும் தீர்ப்பளித் துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பீகார் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் துணைப் பிரிவுகளை ஒரே சமூக அமைப்பாக இணைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது,

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *