மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.கழக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் நேற்று (3-4-2026) காலை 7 மணிக்கே 142 அ வட்டத்தில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். அப்போது பொதுமக்கள் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பளித்து, சால்வை அணிவித்தும், கைத்துண்டுகள் அணிவித்தும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த வாக்குச் சேகரிப்பு நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, வட்டக் கழக செயலாளர் எஸ்.பி.கோதண்டம், சைதை சாதிக், ஜோதிபொன்னம்பலம், ம.ஜேக்கப், பாண்டுரங்கன், ப.சுப்பிரமணி, ஆனந்தன், அபுதாகிர், சிவா, சாகுல்அமீது, கதிர், கதிர், அப்துல் கலாம் உள்ளிட்ட ஏராளமான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் பங்கேற்றனர்.
