லால்குடி தொகுதி த.வெ.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் உறவினர் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்

1 Min Read

திருச்சி. ஏப். 4- லால்குடி அருகே உள்ள மழவனூரில் உள்ள ஒரு வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகிப் பதற்காக அதிகளவில் பணம் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து லால்குடி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான தமிழ்ச்செல்வன் தலைமை யிலான குழுவினர் 2.4.2026 அன்று இரவு மழவனூரில் உள்ள நீலமேகம் என்ப வரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் இருப்பது தெரிய வந்தது. அந்தப் பணம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கும் என் பதால் வருமான வரித் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக அங்கு வந்த வருமான வரித்துறையினர் ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
அந்தப் பணத்துக்கு எவ்வித ஆவணங்களும் இல்லாததால் நீலமேகம், அவரது மகன் அரவிந்த் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் பணத்தை பதுக்கி வைத்திருந்த நீலமேகம், லால்குடி தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *