பத்தாம் வகுப்பு வினாத்தாள் கசிவு விவகாரம் – தெலங்கானா மாநில பாஜக தலைவர் கைது

1 Min Read

அய்தராபாத் ஏப். 7 தெலங்கானாவில் 10-ஆம் வகுப்புபொதுத்தேர்வு வினாத் தாள் கசிந்தவிவகாரத்தில் மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். தெலங்கானாவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 3..4.2023 அன்று தொடங்கியது. இதில் முதல் நாளில் தெலுங்கு வினாத் தாளும் இரண்டாம் நாளில்இந்தி வினாத்தாளும் தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் வாட்ஸ்-அப்பில் கசிந்தன. தெலங் கானாவில் ஏற்கெனவே மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் கே.சந்திரசேகரராவ் தலை மையிலான பிஆர்எஸ் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில் பொதுத் தேர்வு வினாத்தாள் கசிவு, பிஆர்எஸ் அரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கு முழுப் பொறுப்பேற்று கல்வி அமைச் சர் சபீதா இந்திரா ரெட்டி பதவி விலக வேண்டும் என ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் கரீம் நகரில் உள்ள மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் வீட்டை நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் 4.4.2023அன்று நள்ளிரவில் சூழ்ந்து கொண்டனர். பிறகு அவரை   கைது செய்து  ஒரு அரசு மருத்துவமனையில் அவருக்கு   மருத்து வப் பரிசோதனைகள் செய்தனர். கைது செய்யப்பட்ட 16 மணி நேரத்திற்கு பிறகு  அவரை ஹனுமகொண்டா நீதிமன்றத்தில் வாரங்கல் காவல்துறையினர் ஆஜர் படுத்தினர். பண்டி சஞ்சய் குமாரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.  

“இந்த வழக்கில் பண்டி சஞ்சய் குமார் முதல் குற்றவாளியாக சேர்க் கப்பட்டுள்ளார். இவர் மாணவர்களை தூண்டும் வகையில் பேசி வருகிறார். தேர்வு நடக்கும்போது இவருக்கும் வாட்ஸ்-அப் மூலமாக வினாத்தாள் நகல் வந்துள்ளது. இதனை இவருக்கு அனுப்பிய 9 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *