டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்தியாவிலேயே ஊழலில் நம்பர் 1 அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா: ராகுல் குற்றச்சாட்டு.
* தண்டனை குறைத்து கைதிகளை வெளியிடும் அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டியது அரசமைப்பு சட்டத்தின்படியான கடமை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த மசோதாக்களை நாடாளுமன்றத்தின் நீடித்த கூட்டத் தொடரில் கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாடாளுமன்றம் ஏப்ரல் 16 அன்று 3 நாட்களுக்கு மீண்டும் கூடுகிறது; சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள இந்த நேரத்தில் மசோதாக்களை கொண்டு வரக் கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மோடி எத்தகைய வித்தைகள் செய்தாலும், தமிழ்நாட்டில் பாஜக-வால் காலூன்ற முடியாது: மதிமுக தலைவர் வைகோ பேட்டி.
தி இந்து:
* பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுத்த விமர்சனத்தை, தமிழ்நாட்டுப் பிரச்சாரத்தின் போதும் மீண்டும் கூற பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் சவால். பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தவறாக நடத்தப்படுவதாக குற்றம் சாட்டிய பிரதமரை கடுமையாகச் சாடினார்; மேலும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மறுத்த ஒன்றிய அரசையும் திமுக தலைவர் விமர்சித்தார்.
* ‘வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) – FCRA சட்டத் திருத்தம் “கிறிஸ்தவத் தன்னார்வ நிறுவனங்கள் (NGOS), தேவாலயங்கள் மற்றும் பிற சிறுபான்மை நிறுவனங்கள் மீதான நேரடித் தாக்குதல்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
* என்.சி.இ.ஆர்.டி. அமைப்பை ‘நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக’ அறிவித்து கல்வி அமைச்சகம் அரசாணை வெளியீடு. இந்த அறிவிப்பின் மூலம், NCERT கல்வி நிறுவனம் பல்வேறு பாடப்பிரிவுகளை வழங்கவும், பட்டங்களை வழங்கவும் அதிகாரம் பெறுகிறது; மேலும், முனைவர் பட்டப் படிப்புகளை தொடங்குமாறும் அந்த கல்வி அமைப்பிற்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
* ‘துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து திரும்பப் பெறும் அதிகாரம் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உண்டு’, நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* திரிணாமுல் முதல் பாஜக வரை, காங்கிரஸ் முதல் சிபிஎம் வரை: 2026 மேற்கு வங்கத் தேர்தலில் வாரிசு அரசியல் மய்ய இடத்தைப் பிடிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் போன்ற முக்கிய கட்சிகள் அனைத்திலும், ஏற்கனவே அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த வேட்பாளர்களே அதிக அளவில் களமிறக்கப்பட்டு வருகின்றனர்.
– குடந்தை கருணா
