கனிமொழி எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனங்களில் தேர்தல் பறக்கும் படை சோதனை எதுவும் கண்டறியப்படவில்லை

1 Min Read

சென்னை, ஏப்.3 தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முக்கிய அரசியல் தலைவர்களின் வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

கனிமொழி எம்.பி.,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் நேற்று (2.4.2026) தேர்தல் பிரசாரத்திற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் வருகை தந்தார். கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுவிட்டு, திருப்புவனம் பகுதிக்கு பிரசாரத்திற்காக அவர் சென்றார். அப்போது, திருப்புவனம் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே மருத மரம் அருகே நிலைநிறுத்தப்பட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், கனிமொழியின் வாகனத்தை வழிமறித்துச் சோதனை செய்தனர். இந்தச் சோதனையின்போது, கனிமொழி தனது வாகனத்திலிருந்து கீழே இறங்கி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் வாகனத்தை முழுமையாகச் சோதித்த பிறகு, எவ்விதப் பொருட்களும் சிக்காத நிலையில் வாகனத்தைச் செல்ல அனுமதித்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ்

இதேபோல், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த சில நாட்களாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் திருவெறும்பூர் – வேங்கூர் சாலையில் பிரசாரத்திற்காகக் காரில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு தயார் நிலையில் இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது காரைத் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்டனர். சுமார் 5 நிமிடங்கள் வரை நீடித்த இந்தச் சோதனையில், காரில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று தனது பிரசாரத்தைத் தொடர்ந்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *