தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரச்சாரம்

1 Min Read

சென்னை, ஏப்.3 தி.மு.க. கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரப் பயணங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் பெ.சண்முகம், சேலத்தில் நேற்று (2.4.2026) தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.தொடர்ந்து இன்று (3.4.2026) கோவையிலும், நாளை (4.4.2026) கடலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளும் அவர், ஏப்.5, 6-ஆம் தேதிகளில் சென்னை யில் திமுக கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் போட் டியிடும் பழனி, கந்தர்வக் கோட்டை, கீழ்வேளூர் தொகுதி களில் வாக்கு சேகரிக்கவுள்ளார்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் சுற்றுப் பயணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் தேர்தல் சுற்றுப் பயணத் திட்டமும் நேற்று (2.4.2026) அறிவிக்கப்பட்டது.சென்னையில் ஏப்.13-ஆம் தேதி பரப்புரையை தொடங்கும் டி.ராஜா, ஏப்.14-இல் சைதாப்பேட்டை, சேப்பாக்கம், கொளத்தூர், திருவொற்றியூர், சிறீபெரும்புதூர் தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.தொடர்ந்து 15-ஆம் தேதி வேலூர் குடியாத்தம், கே.வி.குப்பத்தி லும், 16-ஆம் தேதி கடலூர் காட்டு மன்னார்கோவிலிலும் 17-ஆம் தேதி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை, கீழ்வேளூர் தொகுதிகளிலும் டி.ராஜா பிரச்சாரம் மேற்கொள் கிறார்.

அதேபோல் கட்சியின் தேசியச் செயலாளர் ராமகிருஷ்ண பாண்டா 12-ஆம் தேதி தளி தொகுதியிலும், 13-ஆம் தேதி திருப்பூரிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

முன்னாள் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், பவானி சாகர் தொகுதியில் இன்றும் (3.4.2026), நாளை (4.4.2026) சிறீவில்லிப் புத்தூரிலும் பிரச்சாரம் செய்கிறார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *