ஈ.வெ.கி.ச. இளங்கோவன் நலம்பெற்று இல்லம் திரும்பினார்

1 Min Read

சென்னை ஏப்.7 ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்   ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்கு   கடந்த மாதம்   திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார். உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கரோனா தொற்று ஏற்பட்டதால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் நிலை சீரான  நிலையில் அவரை கடந்த சில நாட்களாக சாதாரண வார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். முழுமையாக குணம் அடைந்ததால்  வீடு திரும்புவார் என்று மருத்துமனை நிர்வாகம் அறி வித்தது. அதன்படி நேற்று  (6.4.2023)   இளங்கோவன்  இல்லம் திரும்பினார்.  அங்கிருந்து காரில் வீட்டுக்கு சென்றார். அவருடன் நாசே ராமச்சந்திரனும் சென்றார். இளங்கோவன் வழக்கமான உற்சாகத் துடன் புறப்பட்டு சென்றார். அவர் கூறும்போது என்மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி. இப் போது நலத்தோடு இருக்கிறேன் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *