தெற்கு நத்தம் கலந்துரையாடலில் தீர்மானம்

Viduthalai
3 Min Read

 தஞ்சாவூரில் தமிழர் தலைவர் ஆசிரியர்  தலைமையில் நடைபெறும் 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் பங்கேற்க முடிவு

அரசியல்

தெற்குநத்தம், ஏப். 7- உரத்தநாடு ஒன்றியம், தெற்கு நத்தம், நெல்லுப்பட்டு, கிளைக் கழகங்களின் கலந்துரையாடல் கூட் டம் 6.4.2023 வியாழன் இரவு 8 மணி யளவில் தெற்கு நத்தம் சுப்ரமணியன் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் அ.சுப்ரமணியன் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்.

மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன் இயக்க செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர் அவர்களின் தொண்டின் சிறப்பு குறித்து தொடக்கவுரையாற்றி னார்,

தொடர்ந்து, தெற்குநத்தம் தோழர் கள் ஆசைத்தம்பி, சாமிநாதன், லெட்சு மணன், கணேசன், நாகராசன், எழிலர சன், சு.காவியன், அண்பழகன் ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில்குமார், ஒரத்த நாடு நகரத்துனைத் தலைவர் மு.சக்தி வேல், ஒன்றிய இளைஞரணி செயலா ளர் குமரவேல்,மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாவட்ட துணைச்செயலாளர் அ.உத் திராபதி, திராவிடர் மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், பெரியார்வீரவிளையாட்டு கழக மாநில செயலாளர் நா.இராம கிருஷ்ணன், வீதிநாடக கலைக்குழு மாநில அமைப்பாளர் பி.பெரியார் நேசன், ஒன்றியத்தலைவர் த.ஜெக நாதன், ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், கழக செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்கள்,

மாவட்டச்செயலாளர் அ.அருண கிரி, மாவட்டத்தலைவர் சி.அமர்சிங், ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மகிழ்ச்சியடையும்  வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உரையாற்றினர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த திராவிடர் கழக தொழிலாளரணி செயலாளர் மு.சேகர்  இயக்கத்தின் கட்டுபாடுகள் குறித்தும் கொள்கை தலைமையை முன்னிறுத்தி கழகத் தோழர்கள் செயல்பட வேண்டும் என உரையாற்றினார்.

கழக பிரச்சாரம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எதிர்பார்ப்புகள், கழகத்தோழர்கள் அர்ப்பணிப்பு உணர் வுடன் செயல்பட வேண்டியதின் அவ சியம் குறித்து கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இறுதியாக உரை யாற்றினார்.

தெற்கு நத்தம் க.சசிக்குமார், தெற்கு நத்தம் நாகராசு  தந்தையார் சிவஞானம், ஒக்கநாடு மேலையூர் வீரத்தமிழன் தந் தையார் நாராயணன், தலையாமங்கலம் இராமதாஸ் தந்தையார் தங்கையன், மண்டலகோட்டை ஞானம்  தாயார் கோவிந்தம்மாள் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் 4 கட்டங்களாக தமிழ்நாடு, புதுவை இரண்டு மாநிலங்களில் 30 நாட்கள்  57 பொதுக்கூட்டங்ளில் உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.

தந்தைபெரியாரின் மனித உரிமைப் போர் வைக்கம் போராட்ட 100 ஆவது ஆண்டு சிறப்பு தெருமுனைக் கூட்டங் களை கிளைகள் தோறும் நடத்துவது.

புதிய உறுப்பினர்களை சேர்த்து  கழக அமைப்புகளை புதுப்பிப்பது,

விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது.

ஏப்ரல் – 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் அனைவரும் பங்கேற்பது.என முடிவு செய்யப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண் டலமாக அறிவிக்கப்பட்டுள்ள உரத்த நாடு வட்டத்தில்  11 கிராமங்களில் நிலக் கரிச் சுரங்கம் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது உரத்த நாடு  மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளார்கள்   மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்  இத்திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் இக் கூட்டம் வழியுறுத்து கிறது.

டெல்டா மாவட்டங்களிலும் நிலக் கரி எடுக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து 8-.4.-2023 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத் தில் அனைத்து கழகத்தோழர்களும்  பெருமளவில் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தெற்கு நத்தத்தில் பெரியார் படிப் பகம், பெரியார் சிலை விரைவில் அமைப்பது என முடிவு செய்யப் படுகிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *