சென்னை, மார்ச் 30- சென்னை அண்ணா அறிவால யத்தில் நேற்று (29.3.2026) மாலை தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் உருவாக்கித் தந்த பாதையில், கொள்கைத் தடம் மாறாமல், தி.மு.க.வை தலைமைப் பொறுப்பிலிருந்து, வழிநடத்தி, 6 ஆவது முறையாக தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்து, ‘திராவிட மாடல்’ எனப் பெயரிட்டு, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைத்து, தமிழ்நாட்டை முதன்மை இடத்திற்கு நான் கொண்டு வந்திருக்கிறேன். நடை பெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்று 7 ஆவது முறையாக தி.மு.க. ஆட்சியமைக்க இருக்கிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுக்க நினைக்கும் கூட்டம்தான், தி.மு.க.வை எதிர்க்கிறது. அவர்களும் ஏராளமான பொய்ச்செய்திகளைப் பரப்பி பார்த்தார்கள். அது எதுவுமே தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடவில்லை. இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணம் என்னவென்றால், ‘திராவிட மாடல்’ கட்ட மைத்திருக்கும் வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு தொடர்ந்து பயணிக்க வேண்டும். தமிழ்நாடு, தலை நிமிர்ந்த தமிழ்நாடாக, தலைசிறந்த தமிழ்நாடாக எப்போதுமே இருக்கவேண்டும். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து காட்டிய கடந்த 5 ஆண்டுகால ‘திராவிட மாடலின்’ சாதனைகளை விஞ்சும் அளவிற்கு, ‘திராவிடமாடல் 2.0’ இருக்கும்.
பொதுவாக தமிழ்நாட்டு தேர்தல்களை பொறுத்த வரைக்கும், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான் ‘ஹீரோ’, இப்போது. ‘திராவிட மாடல் 2.0’-க்கான இந்தத் தேர்தல் அறிக்கை ‘சூப்பர் ஸ்டார்’ ஆக களம் இறங்கி இருக்கிறது. ‘திராவிட மாடல் 2.0 இல் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.
இவ்வாறு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
