பெரியார் பெரும்படையின் பெருந்தளபதி
சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளி
பகுத்தறிவைப் பரப்பிட பம்பரமாய் சுற்றியவர்
பெரியாரின் கொள்கைக் குண்டேற்றிய பீரங்கி
அய்யாவின் அறிவுக்கருத்தை அண்டபிண்ட
சராசரங்களுக்கு அப்பாலே வீசியவர்
எதிர்ப்புகளை சாம்பலாக்கிய எரிமலை
ஈரோட்டுப் பாசறையின் போராயுதம்
பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரியின்
நினைவுநாளில் தமிழ்நாடு – புதுவை உள்பட
அஞ்சாநெஞ்சன் அழகிரியின் பணித் திறத்தை
– சிறப்பிக்கும் வகையில் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்கள் ஆணைப்படி நினைவுநாள் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அஞ்சா நெஞ்சனின் நினைவு நாளில் (28.3.2026) தஞ்சை வடவாற்றங்கரையில் அமைந்துள்ள அழகிரி நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்த உள்ளார்கள்.
ஆசிரியர் அவர்கள் நாளை (28.3.2026) மாலை பட்டுக் கோட்டையில் அஞ்சா நெஞ்சனின் நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு, வீர வணக்க உரையை நிகழ்த்த உள்ளார்கள்.
அருகமைந்த மாவட்டங்களின் கழகத் தோழர்கள் கூடிட – திராவிடர் பேரினம் திரண்டிட நடைபெறும் விழாவில் தமிழர் தலைவர் அவர்கள் உணர்ச்சிமிகு வீர வணக்க உரை நிகழ்த்த உள்ளார்.
அஞ்சா நெஞ்சன் தொண்டறம் போற்றிட அனைவரும் வருக!
