மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: விதிகளை மீறும் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

1 Min Read

புதுடில்லி, மார்ச் 27 இந்தியா வில் நடைபெறவுள்ள 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் குறித்து, இந்தியப் பதிவாளர் ஜெனரல்  முக்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கணக்கெடுப்புப் பணி யில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தண்டனை விவரம்

மக்கள்தொகைக் கணக் கெடுப்பின் போது, பொது மக்கள் சங்கடப்படும் வகை யிலோ அல்லது சட்டத் திற்குப் புறம்பாகவோ ஆட்சே பனைக்குரிய மற்றும் முறையற்ற கேள்விகளை வேண்டுமென்றே கேட்கும் அதிகாரிகளுக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும், பின்வரும் செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளும் அதே அளவிலான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்:

தங்கள் கடமையைச் செய்வதில் முறையான கவனத்தைச் செலுத்தத் தவறுதல்.அரசின் உத்தரவுகளை மீறிச் செயல்படுதல்.மற்றொரு அதிகாரி தனது கடமையைச் செய்வதைத் தடுத்தல் அல்லது இடையூறு விளைவித்தல்.

மக்கள்தொகைக் கணக்கெடுப் பின் போது கேட்கப்பட வேண்டிய கேள்விகள் மற்றும் அதிகாரிகளுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து இந்தச் சுற்றறிக்கை விரிவாகப் பேசினாலும், மிக முக்கியமான ஒரு விசயத்தில் மவுனம் காக்கிறது. ஜாதி மற்றும் மதம் தொடர்பான கேள்விகள் கணக்கெடுப்பில் இடம்பெறுமா அல்லது அது குறித்த நடைமுறைகள் என்ன என்பது பற்றி இந்தச் சுற்றறிக்கையில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. கணக்கெடுப்புப் பணிகள் நெருங்கி வரும் வேளையில், ஜாதி வாரியான கணக்கெடுப்பு குறித்த கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இது குறித்த தெளிவற்ற சூழல் நீடிக்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *