முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் – உள்ளிக்கோட்டை குமாரசாமிக்கு வீர வணக்கம்!

1 Min Read

அரசியல்

மன்னார்குடி கழக மாவட்டம், உள்ளிக்கோட்டை முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு 

வெ. குமாரசாமி அவர்கள் (வயது 96) 7.4.2023 நள்ளிரவு வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.

ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்றவர். கழகக் கொடியுடன் சந்திக்கக் கூடியவர். மன்னார்குடி  ஒன்றிய தலைவராகவும், ஒன்றிய கழக விவசாய அணி அமைப்பாளராகவும் இருந்து தீவிரமாகப் பணியாற்றிய கட்டுப்பாடு மிக்க கழகப் போராளி!

அவரது பிரிவால் வருந்தும், அவர்தம் வாழ்விணையர் இந்திராணி, மகன்கள் கு. காமராஜ், கு. வீரமணி, மகள்கள் அன்புமணி, பகுத்தறிவு ஆகியோருக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள் கிறோம்.

சுயமரியாதைச் சுடரொளிக்கு வீர வணக்கம்!

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம் 

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மறைந்த குமாரசாமி மகன் மானமிகு கு. வீரமணியிடம் தொலைப்பேசி வழியாக இரங்கல் தெரிவித்தார்.

குறிப்பு: மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமையில் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்துவர். 

தொடர்புக்கு: கு. வீரமணி, செல்பேசி: 9940920406

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *