மும்பை, மார்ச் 22 மகாராட்டிராவில் மெர்ச்சன்ட் நேவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி அசோக் கரத், தனக்கு ‘தெய்வ சக்தி’ இருப்பதாகக் கூறி ஜோதிடராக மாறி ஜோதிடம் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் 35 வயது பெண் ஒருவரை மூன்று ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில், கடந்த 18.3.2026 அன்று நாசிக்கில் வைத்து காவல்துறையினர் இவரை கைது செய்தனர்.
விசாரணையின் போது இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவில், சுமார் 58 ஆபாச காட்சிப் பதிவுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
கைது செய்யப்பட்ட அசோக் கரத்துடன் மகாராட்டிர மகளிர் ஆணைய தலைவி ரூபாலி சக்கங்கர் நெருக்கமாக இருக்கும் ஒளிப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
பெண்களுக்கு நீதி வழங்க வேண்டிய பதவியில் இருப்பவர், பாலியல் குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என பலர் சாடினர். குறிப்பாக காங்கிரஸ், உத்தவ் சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரினர்.
இந்த விவகாரம் மாநில அளவில் சர்ச்சையான நிலையில் ரூபாலி சக்கங்கர், மகளிர் ஆணைய தலைவி பதவி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாக செய்வதாக ரூபாலி சக்கங்கர் தெரிவித்துள்ளார்.
