கழிவுநீர் மேலாண்மையில் சிறப்பான செயல்பாடு! திராவிட மாடல் அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பாராட்டு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 22- தோல் தொழில்துறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளைச் சிறப்பாகக் கையாள்வதில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முன்மாதிரியாகத் திகழ்வதாக நாடாளுமன்ற நிலைக்குழு புகழாரம் சூட்டியுள்ளது.

திரிணமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டோலா சென் தலைமையிலான வர்த்தகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு, அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (சிஇடிபி) மிகச் சிறந்த முறையில் இயங்கி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நிலை: மாநிலத்தில் உள்ள மொத்தமுள்ள சுத்திகரிப்பு நிலையங்களில், திருச்சி மற்றும் பெருந்துறை தவிர்த்து, மீதமுள்ள 13 நிலையங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன.

மேற்கு வங்கத்தின் நிலை: அங்குச் செயல்படும் ஒரு சுத்திகரிப்பு நிலையமும் தரமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ள ‘தேசிய ஒற்றைச் சாளர முறை’ தொழில் தொடங்குவதை எளிதாக்கியுள்ளது.

இதனால், சுத்திகரிப்பு நிலையங்களுக்கான அரசு ஒப்புதல்கள் காலதாமதமின்றி உடனுக்குடன் கிடைக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

தோல் தொழில்துறையில் வளர்ச்சியையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சமநிலையில் கொண்டு செல்வதில் இந்த இரு மாநிலங்களும் பிற மாநிலங்களுக்குப் பாடமாக அமைந்துள்ளதாகக் குழு தெரிவித்துள்ளது.

எனவே, அனைத்து மாநிலங்களிலும் இத்தகைய திறமையான ஒற்றைச் சாளர முறையை நடைமுறைப்படுத்த ஒன்றிய அமைச்சகம் ஊக்குவிக்க வேண்டும் என நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *