கேள்வி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டது குறித்து?
பதில்: தமிழகத்தைவிட மேற்கு வங்கத்தில் காட்டாட்சி தர்பார் அதி கரித்து வருகிறது. அதனை சரி செய்ய இவரைப் போன்றவர்கள் சரியாக இருப்பார்கள் என மத்திய அரசு யோசித்திருக்கலாம்!
– ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்’,
20.3.2026, பக்கம் 35
பதிலடி: தமிழ்நாட்டு முதலமைச்சரின் நிதானப் போக்கையும், பெருந்தன்மையையும் ஆளுநர் ஆர்.என்.ரவி பலகீனமாக நினைத்தி ருக்கலாம். அதேநேரத்தில், உரிய நேரத்தில், தேவையான ‘சூடு’களைக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார். ஆளுநர் ரவி பேசப் பேச – அந்த வெறுப்பு நமக்குச் சாதகமாக இருக்கும் என்றும் நமது முதலமைச்சர் கருதினார்.
ஆனால், மேற்கு வங்க கதையே வேறு! ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்ற ஈரம் காய்வதற்கு முன்பாகவே, அம்மாநில முதலமைச்சர் மம்தா, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், மேற்கு வங்க மண்ணின் மனப்பான்மையை எடுத்துக் கூறினார். அது ஓர் எச்சரிக்கைத் தொனியில்தான் இருந்தது.
அந்தோ பாவம், ஆர்.என்.ரவி!
