2023-இல் பொருளாதார மந்த நிலை பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் : பன்னாட்டு நாணய நிதியம் எச்சரிக்கை

2 Min Read

புதுடில்லி, ஏப்.9 – கரோனாவுக்குப் பின் உல களாவிய பட்டினி, வறுமை அதிகரித்துள்ள தாகவும், 2023-ஆம் ஆண்டில், பொருளாதார மந்தநிலை பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கரோனா பெருந்தொற்றுக்கு பின், 2021-ஆம் ஆண்டு சீரிய முறையில் சென்று கொண்டிருந்த உலகப் பொருளாதாரம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் பாதிக்கும் கீழாக குறைந் தது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் 2022 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் 6.1 சதவிகிதம் என்ற அளவில் இருந்து 3.4 சதவிகிதம் என குறைந்தது. கரோனாவுக்குப் பின் உலக ளாவிய வறுமை மற்றும் பட்டினி அதிகரித்து உள்ளது. இவ்வாறு கடந்த ஆண்டு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சுணக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை மற்றும் ஆமை வேக பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டிலும் நீடிக்கும். அடுத்த 

5 ஆண்டுகளுக்கு உலக பொருளாதார வளர்ச்சி 3 சதவிகிதத்திற்கும் குறைவாகவே காணப் படும்.

கடந்த 20 ஆண்டுகளில் 3.8 சதவிகிதம் என்ற குறைந்த அளவிலேயே உலக பொரு ளாதார மந்தநிலை சுழன்று கொண்டு இருந்தது. தற்போது 3 சதவிகிதத்திற்கும் குறைவான பொருளாதார மந்தநிலையானது, கடந்த 1990-ஆம் ஆண்டிற்குப் பிறகு கணக்கிடப்பட்ட குறைந்த நடுத்தர கால வளர்ச்சி அளவாகும். உலக பொரு ளாதாரத்தின் மெதுவான வளர்ச்சி பல்வேறு நாடுகளுக்கு பேரடியாக இருக்கும். 90 சதவிகித முன்னேறிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதங்களில் சரிவைக் காணும் என கணிக் கப்பட்டு உள்ளது.  வளர்ந்து வரும் பொரு ளாதாரத்தில் ஆசிய நாடுகள் முக்கிய பங் காற்றி வருகின்றன. குறிப்பாக 2023-ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியின் பாதி பங்கை இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு ஆசிய நாடுகள் கொண்டிருக்கும். அடுத்த வாரம் பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த கால கூட்டம் நடைபெற உள்ளது. இந்த  கூட்டத்தில் பொருளாதார சுணக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கை கள் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்களை தொடர்ச்சியாக உயர்த் துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.  இவ்வாறு கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *