1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வை ஏப்.28-க்குள் முடிக்க அறிவுறுத்தல் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

1 Min Read

அரசியல்

சென்னை,ஏப்.9- தமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை இம் மாதம் 28ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 13இல் தொடங்கி ஏப்.3ஆம் தேதியு டன் முடிவடைந்தது. அதேபோல, மார்ச் 14இல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வும் ஏப்ரல் 5ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் 6.4.2023 அன்று தொடங்கி இம்மாதம் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை இம்மாதம் 28ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வை 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையும், 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப தேர்வுகளை ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர் களுக்கு, உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப தேர்வுகளை ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *