அயோத்தியில் நிலநடுக்கம்

Viduthalai
0 Min Read

அயோத்தி, நவ. 5- உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி யில் நேற்று (4.11.2023) அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ரிக்டராக பதிவாகி உள்ளது. அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மய்யம் அயோத்திக்கு வடக்கே 215 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் மய்யம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மய்யம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *