சென்னை, மார்ச் 13 தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மய்யம் சார்பில், இந்திய வனப் பணி (அய்.எஃப்எஸ்) முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரும் மார்ச் 17-ஆம் தேதி மாதிரி ஆளுமைத் தேர்வு நடைபெற உள்ளது. பதிவு செய்யும் காலம்: மார்ச் 13 முதல் 15-ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யும் இணையதளம்: www.civilservicecoaching.com விண்ணப்ப விவரங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: [email protected]
தொடர்புக்கு: 044-24621475 WhatsApp: 93457 66957 [email protected] இந்த மாதிரி தேர்வு, யுபிஎஸ்சி ஆளுமைத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுவதாக பயிற்சித் துறை தலைவர் எஸ். கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.
ஆவடி கனரக ஊர்தி தொழிற்சாலையில் ஓராண்டு பழகுநர் பயிற்சி
விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, மார்ச் 13 ஆவடி கனரக ஊர்தி (எச்விஎஃப்) தொழிற்சாலையில், தொழில்பழகுநர் பயிற்சி திட்டத்தின் கீழ் ஓராண்டு கால பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: BE, B.Tech, BA, B.Sc, B.Com, BBA, BCA பட்டதாரிகள் டிப்ளமா முடித்தவர்கள் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 2022, 2023, 2024, 2025-ஆம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம்: www.nats.education.gov.in (nats.education.gov.in in Bing) கடைசி தேதி: ஏப்ரல் 20 பயிற்சி நன்மைகள்: மாதம் ரூ.14,000 வரை உதவித்தொகை பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும். இந்த அறிவிப்பை ஆவடி கனரக ஊர்தி தொழிற்சாலையின் முதன்மை பொதுமேலாளர் வெளியிட்டுள்ளார்.
